அர்ஜெண்டினாவில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பலி


அர்ஜெண்டினாவில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பலி
x
தினத்தந்தி 2 July 2019 9:15 PM GMT (Updated: 2 July 2019 8:20 PM GMT)

அர்ஜெண்டினாவில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பலியானார்கள்.

பியூனோஸ் அயர்ஸ்,

அர்ஜெண்டினாவின் டுகுமன் மாகாணத்தில் உள்ள மென்டோசா நகரில் இருந்து டர்மாஸ் டி ரியோ ஹோண்டா நகருக்கு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

லா மாட்ரிட் நகரில் உள்ள அபாயகரமான வளைவு பாதையில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு பனி சூழ்ந்திருந்ததன் காரணமாக சாலை கண்ணுக்கு தெரியாமல் போனது.

இதனால் டிரைவர் பஸ்சை சாலையோரமாக நிறுத்த முயன்றார். அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக சாலையோரம் உள்ள தாழ்வான பகுதியில் பஸ் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில், 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 40 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story