செக் குடியரசு நாட்டில் ஆஸ்பத்திரியில் துப்பாக்கி சூடு; 7 பேர் பலி


செக் குடியரசு நாட்டில் ஆஸ்பத்திரியில் துப்பாக்கி சூடு; 7 பேர் பலி
x
தினத்தந்தி 10 Dec 2019 9:02 AM GMT (Updated: 10 Dec 2019 10:29 PM GMT)

செக் குடியரசு நாட்டில் ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.

பிராகா,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஆஸ்ட்ராவ் நகரில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. இங்கு நேற்று காலை ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர்.

அவர்கள் ஆஸ்பத்திரியில் உள்ள காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல் சுட்டுத்தள்ளினார்.

இதில் 6 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாக்குதல் நடத்திய நபர் யார்? தாக்குதலின் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Next Story