நியுசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு


நியுசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு
x
தினத்தந்தி 18 Dec 2019 10:09 AM GMT (Updated: 18 Dec 2019 10:09 AM GMT)

நியுசிலாந்து ரவுல் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

வெல்லிங்டன்,

நியுசிலாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரவுல் தீவில் இரவு 1.56 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.

இந்த தீவின் தென் மேற்கு திசையில் சுமார் 80 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Next Story