டோங்காவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு


டோங்காவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு
x
தினத்தந்தி 6 May 2020 1:27 AM GMT (Updated: 6 May 2020 1:27 AM GMT)

டோங்காவில் ஹிஹிபோ பகுதியில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பெய்ஜிங்,

டோங்கா ஆட்சி பகுதியானது 169 தீவு கூட்டங்களை உள்ளடக்கியது.  பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நிலையில், நிலநடுக்கங்கள் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.  இங்குள்ள ஹிஹிபோ என்ற கிராம பகுதியில் இருந்து 122 கி.மீட்டர் தொலைவில் நேற்றிரவு 11.20 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  

இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி உள்ளது.  இந்நிலநடுக்கம் 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  எனினும், இதனால் ஏற்பட்ட காயங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Next Story