ரஷ்யாவில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து; 7 பேர் பலி


ரஷ்யாவில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து; 7 பேர் பலி
x
தினத்தந்தி 11 May 2020 4:37 AM GMT (Updated: 11 May 2020 4:37 AM GMT)

ரஷ்யாவில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.

கிராஸ்னோகார்ஸ்க்,

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் கிராஸ்னோகார்ஸ்க் என்ற பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது.  இதில் 2வது தளத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.  சம்பவத்தின்பொழுது அந்த கட்டிடத்தில் 29 பேர் இருந்துள்ளனர்.  அவர்களில் பலர் வயது முதிர்ந்த படுக்கையில் இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் ஆவர்.

தீ விபத்து ஏற்பட்டவுடன், உடனடியாக 11 பேர் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.  எனினும், தீ விபத்தின்பொழுது அந்த கட்டிடத்தில் குழந்தைகள் யாரும் இல்லை.

இதனை அடுத்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு வந்தனர்.  அவர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு 7 பேரின் உடல்களை மீட்டு உள்ளனர்.  இந்த தகவலை அந்நாட்டின் அவசரகால சேவைக்கான செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் இன்று காலை செய்தியாளர்களிடம் கூறினார்.

Next Story