சீனாவில் 51 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு


சீனாவில் 51 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 25 May 2020 10:30 PM GMT (Updated: 25 May 2020 9:38 PM GMT)

சீனாவில் 51 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீஜிங், 

சீனாவில் புதிதாக 51 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 40 பேருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் ஏதுமில்லை. இவர்களில் பெரும்பாலோர் கொரோனாவின் மையமாக விளங்கிய உகானை சேர்ந்தவர்கள் ஆவார்கள். உகானில் கடந்த 10 நாளில் 60 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. புதிதாக பாதிப்புக்கு ஆளாகியுள்ள 51 பேரில் 11 பேர் வெளிநாட்டு பயண தொடர்பு உடையவர்கள் என சீன தேசிய சுகாதார கமிஷன் கூறுகிறது. அறிகுறிகள் ஏதுமின்றி கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ள 40 பேரில் 38 பேர் உகானை சேர்ந்தவர்கள்.

சீனாவில் அறிகுறிகள் ஏதுமின்றி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள 396 பேர் மருத்துவ கண்காணிப்பின்கீழ் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Next Story