மெக்சிகோவில் ஒரே நாளில் 2,485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மெக்சிகோவில் ஒரே நாளில் 2,485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 26 May 2020 9:45 PM GMT (Updated: 26 May 2020 8:21 PM GMT)

மெக்சிகோவில் நேற்று ஒரே நாளில் 2,485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


* சிரியாவின் கிழக்குப் பகுதியில் அல் ஹவ்லா பகுதியில் உள்ள சிறையில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் 7 பேர் தப்பி ஓடினர். முன்னதாக கடந்த மாதம் குர்து இன போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறையில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலர் தப்பி ஓடியது நினைவுகூரத்தக்கது.

* ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள குரீல் தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* மெக்சிகோவில் நேற்று ஒரே நாளில் 2,485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதே போல் பலி எண்ணிக்கை 7,633 ஆக அதிகரித்துள்ளது.

* பாகிஸ்தானின் கராச்சி நகரில் 97 பேரை பலி கொண்ட விமான விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக பிரான்ஸ் விமான பாதுகாப்பு ஆணையம் சிறப்பு விசாரணைக்குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது.

Next Story