இங்கிலாந்தில் கொரோனா தொற்று; பலி எண்ணிக்கை 61,245 ஆக அதிகரிப்பு


இங்கிலாந்தில் கொரோனா தொற்று; பலி எண்ணிக்கை 61,245 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 Dec 2020 12:27 AM GMT (Updated: 7 Dec 2020 12:27 AM GMT)

இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 245 ஆக அதிகரித்து உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் நேற்றுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 17,272 ஆக உள்ளது.  இதனால், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 லட்சத்து 23 ஆயிரத்து 242 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோன்று கடந்த 24 மணிநேரத்தில் 231 பேர் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர்.  இதனால் கொரோனா பலி எண்ணிக்கை மொத்தத்தில் 61 ஆயிரத்து 245 ஆக அதிகரித்து உள்ளது.

அந்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது.  ஆனால், வடக்கு இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகரில், கூட்ட நெருக்கடி மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகியவற்றை முன்னிட்டு கிறிஸ்துமஸ் சந்தை மூடப்பட்டது.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் விதிமீறலில் ஈடுபட்ட 4 பேர் லண்டனில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Next Story