சைக்கிள் போட்டி: துபாய் நகரில், முக்கிய சாலைகள் நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது
சைக்கிள் போட்டி: துபாய் நகரில், முக்கிய சாலைகள் நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது.
துபாய்,
துபாய் விளையாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
துபாய் நகரில் யுஏஇ டூர் எனப்படும் சைக்கிள் போட்டி காரணமாக அதில் பங்கேற்றுள்ளவர்கள் முக்கிய சாலைகள் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணி முதல் மாலை 4.30 மணி வரை கடந்து செல்வர். இதன் காரணமாக துபாய் தேரா பகுதியில் உள்ள அல் கலீஜ் சாலையின் ஒரு பகுதியானது மதியம் 12.30 மணி முதல் 12.55 மணி வரை மூடப்படும்.
பனியாஸ் சாலையின் ஒரு பகுதி மதியம் 12.50 மணி முதல் 1.15 மணி வரையிலும், துபாய்-அல் அய்ன் சாலையின் ஒரு பகுதி மதியம் 1.10 மணி முதல் 1.25 மணி வரையிலும், அல் வாசல் சாலையானது மதியம் 1.20 மணி முதல் 1.40 மணி வரையிலும் மூடப்படும்.
இதேபோல் நகரின் முக்கிய சாலைகளின் ஒரு பகுதியானது மாலை 4.30 மணி வரையிலும் சைக்கிள் போட்டி காரணமாக மூடப்பட்டிருக்கும். எனவே வாகன ஓட்டிகள் இது குறித்த தகவலை தெரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களது பயணத்தை ஏற்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.