சிங்கப்பூரில் ஜுன் 1 முதல் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டம்


சிங்கப்பூரில்  ஜுன் 1 முதல் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டம்
x
தினத்தந்தி 31 May 2021 5:04 PM GMT (Updated: 31 May 2021 5:23 PM GMT)

சிங்கப்பூரில் ஜுன் 1 முதல் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த நிலையில், சிங்கப்பூரில் நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. 

நாடு முழுவதும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போட சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.  சிங்கப்பூரில் இதுவரை சுமார் 62 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  33-பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். 


Next Story