இங்கிலாந்தில் மேலும் 7,738- பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு
இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லண்டன்,
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்டதாக கூறப்படும் டெல்டா வகை கொரோனா பரவலால் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், அந்நாட்டில் ஒரே நாளில் 7,738- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை தொற்று பாதிப்பு 8,125- ஆக பதிவான நிலையில், இன்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுகள் மேலும் ஒரு மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story