பிரேசிலில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா- ஒரே நாளில் 84- ஆயிரம் பேருக்கு தொற்று


பிரேசிலில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா- ஒரே நாளில் 84- ஆயிரம் பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 16 Jun 2021 11:50 PM GMT (Updated: 16 Jun 2021 11:50 PM GMT)

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 84,735 - பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரசிலியா

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்  உலக முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொற்று பரவி ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் ஆகியுள்ள பாதிலும் கொரோனாவின் கோர தாண்டவம் கட்டுக்குள் வந்தபாடில்லை. உருமாற்றம் அடைந்து அடுத்தடுத்து அலைகளாக வந்து வைரஸ் இன்னமும் பல நாடுகளில் வீரியத்துடன் பரவி வருகிறது. 

மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் போடும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால், நம்பிக்கை அளிக்கும் வகையில் தொற்று பரவல் சற்று தணிந்து வருகிறது.  எனினும் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. 

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 84,735- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அந்நாட்டில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,628,588- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக  2,529- பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,529- ஆக உள்ளது.  

Next Story