நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவு; 101 பேர் உயிரிழப்பு
நேபாள நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 101 பேர் உயிரிழந்து உள்ளனர்.
காத்மண்டு,
நேபாள நாட்டில் இந்த வார தொடக்கத்தில் கனமழை பெய்து பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டின் உள்விவகார அமைச்சகம் இன்று மாலை வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் பருவமழையை தொடர்ந்து ஏற்பட்டு உள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 101 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதுதவிர, 41 பேரை இன்னும் காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது என தெரிவித்து உள்ளது. வெள்ளத்தில் 2,232 வீடுகள் அடித்து செல்லப்பட்டு உள்ளன. 49 வீடுகள், 8 கோசாலைகள், 6 பாலங்கள் மற்றும் 3 அரசு அலுவலகங்கள் சேதமடைந்து உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story