சீனாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு
சீனாவில் கடுமையான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது.
பீஜிங்,
சீனாவின் வடமேற்கே குயிங்காய் மாகாணத்தில் டெலிங்கா நகரில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்து உள்ளது.
இந்நிலநடுக்கம் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதுவரை, பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. கடந்த 12ந்தேதி சீனாவின் வடமேற்கே குயிங்காய் மாகாணத்தில் மென்யுவான் கவுன்டி பகுதியில் ரிக்டரில் 5.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ஒரு மாதத்தில் அதே மாகாணத்தில் 2வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story