பிரான்சில் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு


பிரான்சில் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு
x

கோப்புப்படம்

பிரான்சில் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

லியோன்,

தென்கிழக்கு பிரான்சில் உள்ள கிரெனோபில் அருகே உள்ள வெர்சௌட் விமானநிலையத்தில் இருந்து நேற்று பிற்பகலில் சுற்றுலா விமானம் ஒன்று 5 பேருடன் புறப்பது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் விரைவாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தின் எரிந்த இடிபாடுகளுக்குள் நான்கு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தையின் உடல்களை கண்டுபிடித்தனர்.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story