எந்த நாடும் ஆப்கானிஸ்தானில் பாதிப்பு ஏற்படுத்துவதை விரும்பவில்லை - பாகிஸ்தான்


எந்த நாடும் ஆப்கானிஸ்தானில் பாதிப்பு ஏற்படுத்துவதை விரும்பவில்லை - பாகிஸ்தான்
x

தலிபான் தலைவர்களை இந்தியா தூதுக்குழுவினா் சந்தித்த நிலையில் பாகிஸ்தான் கருத்து தொிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்,

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து வழங்கப்பட்டு வரும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை மேற்பார்வையிட, வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (பிஏஐ) ஜே.பி. சிங் தலைமையிலான குழு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு பயணம் மேற்கொண்டது.

இதுகுறித்து கருத்து தொிவித்த பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடா்பாளா் அசிம் இப்திகார் கூறுகையில், மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமை மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை எடுத்துச் செல்ல பாகிஸ்தான் கடந்த நவம்பா் மாதம் அனுமதி அளித்தது.

"அமைதியான, நிலையான மற்றும் வளமான ஆப்கானிஸ்தானைத்தான் நாங்கள் விரும்புகிறோம். நிலையான மற்றும் வளமான ஆப்கானிஸ்தானில் எந்தவொரு நாடும் பாதிப்பை ஏற்படுத்துவதை விரும்பவில்லை. என அவா் தொிவித்தாா்.

ஆப்கானிஸ்தானில் இந்தியக் குழுவினா் தலிபானின் மூத்த தலைவா்களை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.


Next Story