நான் மலாலா இல்லை; இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறேன்: யானா மீர்


நான் மலாலா இல்லை; இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறேன்:  யானா மீர்
x
தினத்தந்தி 24 Feb 2024 4:29 AM GMT (Updated: 24 Feb 2024 5:04 AM GMT)

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலா, அடைக்கலம் தேடி இங்கிலாந்தில் உள்ளார்.

லண்டன்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலராக இருப்பவர் யானா மீர். இங்கிலாந்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் கல்வி மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அவருக்கு இங்கிலாந்து எம்.பி. தெரசா வில்லியர்ஸ் பன்முக தன்மைக்கான தூதர் விருது வழங்கி கவுரவித்து இருக்கிறார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் மீர் பேசும்போது, நான் மலாலா யூசுப் இல்லை. ஏனெனில், இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள என்னுடைய சொந்த ஊரான காஷ்மீரில் பாதுகாப்பாகவும், சுதந்திரத்துடனும் இருக்கிறேன். நான் என்னுடைய சொந்த நிலத்தில் இருந்து தப்பியோடி விடமாட்டேன். உங்களுடைய நாட்டில் அடைக்கலம் கேட்கவும் மாட்டேன் என்று கூறினார்.

இதன்பின் அவர் கூறும்போது, காஷ்மீர் ஒடுக்கப்பட்டு உள்ளது என கூறியதற்காக மலாலாவை சாடியுள்ளார். காஷ்மீருக்கு வருகை தருவதில் கவனம் கொள்ளாத, ஒடுக்கப்பட்டு உள்ளது என்ற கதைகளை புனையும் சமூக ஊடகம் மற்றும் வௌநாட்டு ஊடகங்களுக்கு நான் ஆட்சேபனை தெரிவிக்கிறேன்.

மத அடிப்படையில் இந்தியாவை பிரிவினைப்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றும் அவர் கடுமையாக பேசியுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலா, அடைக்கலம் தேடி இங்கிலாந்தில் உள்ளார்.


Next Story