இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்; ஒரு வாரத்திற்கு ஏர் இந்தியா விமான சேவை ரத்து


இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்; ஒரு வாரத்திற்கு ஏர் இந்தியா விமான சேவை ரத்து
x
தினத்தந்தி 8 Oct 2023 9:14 AM GMT (Updated: 8 Oct 2023 9:55 AM GMT)

டெல் அவிவ் நகருக்கு 14-ந்தேதி வரை விமான சேவையை ரத்து செய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக டெல் அவிவ் நகருக்கு, வரும் 14-ந்தேதி வரை விமான சேவையை ரத்து செய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்து உள்ளது. டெல்லியில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு வாரந்தோறும் 5 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கி வரும் நிலையில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story