ஒரே நாளில் தென்கொரியாவில் 70 ஆயிரம் பேருக்கு கொரோனா


ஒரே நாளில் தென்கொரியாவில் 70 ஆயிரம் பேருக்கு கொரோனா
x

கோப்புப்படம்

ஒரே நாளில் தென்கொரியாவில் 70 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சியோல்,

தென்கொரியாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அவ்வப்போது கொரோனா அலை எழுச்சி பெற்று வருகிறது. நேற்று முன்தினம் அங்கு 72 ஆயிரத்து 873 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.நேற்று அங்கு 70 ஆயிரத்து 324 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

புதிதாக பாதிப்புக்குள்ளானோரில் 69 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள்.

தொற்றால் ஒரு நாளில் 53 பேர் இறந்துள்ளனர். இதுவரை இந்த தொற்றால் அங்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 164 ஆக அதிகரித்துள்ளது.


Related Tags :
Next Story