இஸ்ரேல் போரில் 20 உறவினர்களை இழந்து தவிக்கும் டாக்டரின் சோகம்


இஸ்ரேல் போரில் 20 உறவினர்களை இழந்து தவிக்கும் டாக்டரின் சோகம்
x

என்னுடைய சகோதரியின் வீட்டில் இருந்து 32 அடி தொலைவிலேயே இருந்த அந்த வீடு மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

ரோசெஸ்டர் ஹில்ஸ்,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் 11 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்கும் தீவிர பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது.

இந்த மோதலில், டாக்டர் எமத் ஷெஹாடா (வயது 47) என்பவர் அதிகம் பாதிப்படைந்து உள்ளார். குவைத்தில் பிறந்து சிரியாவில் வசித்து வந்த அவர், பின்னர் 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு சென்றார். டெட்ராய்ட் நகரில் படித்த அவர் அமெரிக்காவிலேயே தொடர்ந்து வசித்து வருகிறார்.

இவருடைய சகோதரி ஒருவர் காசாவில் வசிக்கிறார். இந்நிலையில், தொடர்ந்து வரும் மோதல் பற்றி ஷெஹாடா கூறும்போது, என்னுடைய சகோதரிக்கு அடுத்துள்ள வீட்டில் என்னுடைய உறவினர்கள் 12 பேர் வசித்து வந்தனர். அந்த வீடு மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த வீடு என்னுடைய சகோதரியின் வீட்டில் இருந்து 32 அடி தொலைவிலேயே இருந்தது.

இந்த தாக்குதலில், உறவினரான முகமது கிரெய்ஸ், முகமதுவின் 3 குழந்தைகள் மற்றும் கர்ப்பிணியாக இருந்த மயார் (வயது 19) ஆகியோரும் உயிரிழந்து உள்ளனர் என கூறியுள்ளார். ஒவ்வொரு முறை தொலைபேசி அழைப்பு மணி அடிக்கும்போதும், காசாவில் யாரையேனும் பற்றிய கெட்ட செய்தியாக இருக்குமோ என்ற வருத்தம் வருகிறது என்றும் அவர் கூறுகிறார்.


Next Story