வரி ஏய்ப்பு புகார்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் நிறுவனத்திற்கு ரூ.136 கோடி அபராதம்


வரி ஏய்ப்பு புகார்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் நிறுவனத்திற்கு ரூ.136 கோடி அபராதம்
x

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு ரூ.136 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் பெரும் தொழில் அதிபரும் ஆவார். அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களையும் டிரம்ப் நடத்தி வருகிறார்.

டிரம்ப்பின் நிறுவனம் வரி எய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மான்ஹட்டன் நீதிமன்றம் அவருக்கு 1.6 மில்லியன் டாலர்(ரூ.136 கோடி) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ள டிரம்பிற்கு பெரும் சங்கடத்தை கொடுக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.


Next Story