"உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை": அமெரிக்கா அறிவிப்பு


உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை: அமெரிக்கா அறிவிப்பு
x

கோப்புப்படம் 

ரஷியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷியா மாதக்கணக்கில் போர் செய்து வருகிறது. இந்த நிலையில், ரஷியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், "(ரஷிய அதிபர் விளாடிமிர்) புடின் தனது படைகளை வெளியேற்றுவதற்கு அடுத்த சிறந்த விஷயம் ராஜதந்திர பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணுவது என்பதை நாங்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம்.

"பேச்சுவார்த்தைகளுக்கு எப்போது தயாராக இருக்கிறார் என்பதையும், அந்த பேச்சுவார்த்தைகள் எப்படி இருக்கும் என்பதையும் ஜெலென்ஸ்கி தீர்மானிக்க வேண்டும் என்றும் நாங்கள் கூறியுள்ளோம்" என்று கிர்பி செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், "உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து நாங்கள் ரஷியர்களுடன் கலந்துரையாடப் போவதில்லை என்று அவர் கூறினார். "அந்த உரையாடல்கள் நடக்கவில்லை. ஏனெனில் அதிபர் ஜெலென்ஸ்கி அதற்குத் தயாராக இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

"நீங்கள் ஜெலென்ஸ்கியைப் குறை கூற முடியாது". ஏனெனில் பேச்சுவார்த்தைக்கு ரஷியா தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story