கொடுமுடிமகுடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா;கொடி ஏற்றத்துடன் தொடங்கியது


கொடுமுடிமகுடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா;கொடி ஏற்றத்துடன் தொடங்கியது
x

கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

ஈரோடு

கொடுமுடி

கொடுமுடியில் பழமையான மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகள் வாசம் செய்யும் இந்த கோவில் சிறந்த பரிகார தலமாகவும் விளங்குகிறது. நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறும்.இந்த ஆண்டு திருவிழாவுக்காக நேற்று கோவிலில் கொடி ஏற்றப்பட்டது. வருகிற 3-ந் தேதி தேர்த்திருவிழா நடைபெறுகிறது. 5-ந் தேதி மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலாவுடன் விழா நிறைவுபெறுகிறது.


Related Tags :
Next Story