குருதட்சிணாமூர்த்தி கோவிலில் குருபூஜை விழா


குருதட்சிணாமூர்த்தி கோவிலில் குருபூஜை விழா
x

குருதட்சிணாமூர்த்தி கோவிலில் குருபூஜை விழா

திருவாரூர்

திருவாரூர் மடப்புரத்தில் உள்ள குருதட்சிணாமூர்த்தி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் உத்திர நட்சத்திர நாளில் குருபூஜை மகோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று குருபூஜை மகோற்சவ விழா நடந்தது. முன்னதாக கோ பூஜையுடன், கணபதி ஹோமத்துடன் சாமிக்கு பால், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை சாமி வீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.


Next Story