கட்டியப்ப அய்யனார் கோவிலில் குதிரை சிலை எடுத்து செல்லும் திருவிழா
கட்டியப்ப அய்யனார் கோவிலில் குதிரை சிலை எடுத்து செல்லும் திருவிழா
திருவாரூர்
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள பண்டுதக்குடியில் கட்டியப்ப அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் குதிரை சிலை எடுத்து செல்லும் திருவிழா நடைபெற்றது. விழாவில் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பண்டுதக்குடி பாலத்திலிருந்து கோவில் வரை பக்தர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட குதிரை சிலைகளை எடுத்து ஊர்வலமாக செல்லும் விழா நடைபெற்றது. பின்னர் குதிரை சிலைகள் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story