கம்பத்தில் செல்லாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கம்பத்தில் செல்லாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
தேனி
கம்பத்தில் செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை, 2-வது கால யாகசாலை பூஜை, தீபாராதனை, 3-வது கால யாகசாலை பூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பல்வேறு புனித தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட தீ்ர்த்தம் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் கோவில் வளாகத்தில் உள்ள கருப்பசாமி, பைரவன் சன்னதியிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி விழா கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story