பழமையான 135 கோவில்களில் திருப்பணிகள் - மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல்


பழமையான 135 கோவில்களில் திருப்பணிகள் - மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல்
x

இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில், புராதனமான மற்றும் தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 38-வது வல்லுநர் குழு கூட்டம் நடைபெற்றது.

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில், புராதனமான மற்றும் தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 38-வது வல்லுநர் குழு கூட்டம் திருப்பணி இணை-கமிஷனர் பொ.ஜெயராமன் தலைமையில் நடந்தது.

தேனி மாவட்டம், பெரியகுளம் வெங்கடாஜலபதி கோவில், உப்புக்கோட்டை செல்லாண்டியம்மன் கோவில், தூத்துக்குடி மாவட்டம், கிளவிப்பட்டி விநாயகர் கோவில், நெல்லை மாவட்டம், நாங்குநேரி இசக்கி அம்மன் கோவில், கன்னியாகுமரி மாவட்டம், குளத்தூர் முத்தாரம்மன் கோவில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பொன்னியம்மன் கோவில்,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, ஆஞ்சநேயர் கோவில், அஞ்செட்டி சோமேசுவரர் கோவில், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் எட்டியம்மன் கோவில். தர்மபுரி மாவட்டம் குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி மத்தியபுரீசுவரர் கோவில் உட்பட 135 கோவில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கோவில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படுகிறது. திருப்பணிகள் நிறைவடைந்ததும் கோவில்களில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

கூட்டத்தில், தலைமை பொறியாளர் கே.தட்சிணாமூர்த்தி, ஆகம வல்லுநர் குழு உறுப்பினர் கோவிந்தராஜ பட்டர், கே.சந்திரசேகர பட்டர், தலைமை பொறியாளர் (ஓய்வு) முதுநிலை ஆலோசகர் கே.முத்துசாமி, ஸ்தபதி கே. தட்சிணாமூர்த்தி, தொல்லியல் துறை கண்காணிப்பாளர்கள் சீ.வசந்தி, சத்தியமூர்த்தி, ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story