அக்னீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
தஞ்சாவூர்
திருக்காட்டுப்பள்ளி,
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி கோவில் முன்புறம் உள்ள நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள் நீர் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்துக்கு பிறகு நந்தியம்பெருமான் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைப்போல கோவில்பத்து ஆபத்சகாயேஸ்வரர் கோவில், ஒன்பத்துவேலி வன்மீகிநாதர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
Related Tags :
Next Story