திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாதம் உண்டியல் வருமானம் ரூ.3.60 கோடி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாதம் உண்டியல் வருமானம் ரூ.3.60 கோடி
x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாதம் உண்டியல் வருமானம் ரூ.3.60 கோடி கிடைத்துள்ளது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் நகைகள் மாதம் இரண்டு முறை எண்ணப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த மாதம் மூன்று முறை எண்ணப்பட்டுள்ளது. இதில் 8-ந் தேதி, 22-ந் தேதிகளில் ஏற்கனவே எண்ணப்பட்டன. 3-வது முறையாக நேற்று கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நடந்தது.

இதில், ரூ.1 கோடியே 20 லட்சத்து 23 ஆயிரத்து 362 கிடைத்துள்ளது. கடந்த 8-ந் தேதி எண்ணப்பட்டதில் ரூ.1 கோடியே 69 லட்சத்து 54 ஆயிரத்து 36 கிடைத்தது. அதேபோல் 22-ந் தேதி ரூ.70 லட்சத்து 54 ஆயிரத்து 797 கிடைத்தது. ஆக மொத்தத்தில் இந்த மாதம் மூன்று முறை எண்ணப்பட்டதில் ரூ.3 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரத்து 195 கிடைத்துள்ளது.

அதேபோல் மொத்தத்தில் தங்கம் 3 கிலோ 735 கிராமும், வெள்ளி 35 கிலோ 760 கிராமும் கிடைத்தது. மேலும் வெளிநாட்டு நோட்டுகள் 1,445 கிடைத்துள்ளது.


Next Story