இரு நாட்டு கிரிக்கெட் தொடர்: இந்தியாவிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை


இரு நாட்டு கிரிக்கெட் தொடர்: இந்தியாவிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை
x
தினத்தந்தி 5 Jan 2018 8:30 PM GMT (Updated: 5 Jan 2018 8:20 PM GMT)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட் கராச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:–

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட் கராச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:–

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடுவதை இந்தியா விரும்பவில்லை. இந்தியாவுடன் போட்டியில் விளையாடாவிட்டால் நமது கிரிக்கெட் ஒன்றும் மடிந்து விடாது. எனவே அவர்களுடன் கிரிக்கெட் பற்றிய நினைப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இப்போதைக்கு மறந்து விட வேண்டும்.

இந்தியாவுடன் நேரடி தொடரில் மோதி 10 ஆண்டுகள் ஆகி விட்டது. அதனால் நமது கிரிக்கெட் தளர்ந்து விட்டதா என்ன? இப்போது தான் நன்றாக விளையாடி வருகிறோம். ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது உதாரணமாக சொல்லலாம். 2009–ம் ஆண்டுக்கு பிறகு பெரிய அணிகள் பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாவிட்டாலும் இங்கு கிரிக்கெட் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது.

எனவே இந்தியாவுடன் நேரடி தொடர்களுக்காக கெஞ்சி கூத்தாட வேண்டிய அவசியம் இல்லை. செலவினங்களை குறைக்கும் பட்சத்தில் கிரிக்கெட் வாரியத்தை சிறப்பாக நடத்த முடியும்.

இவ்வாறு மியாண்டட் கூறினார்.


Next Story