நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லுமா என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து,
இந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தான் வந்து 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் படி நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், ‘நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குழுவினர் மற்றும் அரசு மற்றும் வீரர்களிடம் கலந்து ஆலோசித்து இந்த விஷயத்தில் முடிவு செய்யப்படும்’ என்றார். பாதுகாப்பு காரணமாக 2003-ம் ஆண்டு முதல் நியூசிலாந்து உள்பட பல நாட்டு கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் 40 பேர் உயிரிழப்புக்கு காரணமான தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்குமா? என்ற கேள்விக்கு மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார்.