உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் - ஐ.சி.சி. உறுதி


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் - ஐ.சி.சி. உறுதி
x
தினத்தந்தி 27 Feb 2019 10:15 PM GMT (Updated: 27 Feb 2019 7:55 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என ஐ.சி.சி. உறுதி அளித்துள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை செயற்குழு கூட்டம் துபாயில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ‘இங்கிலாந்தில் மே 30-ந் தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினர், போட்டி அதிகாரிகள் மற்றும் இந்திய ரசிகர்களுக்கு உயரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு ஐ.சி.சி.யின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் பதில் அளிக்கையில், ‘இந்திய அணியினர் உள்பட அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்’ என்று உறுதி அளித்தார்.

Next Story