வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் இறுதி ஆட்டம் மழையால் ரத்து


வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் இறுதி ஆட்டம் மழையால் ரத்து
x
தினத்தந்தி 24 Sep 2019 11:03 PM GMT (Updated: 24 Sep 2019 11:03 PM GMT)

வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான இறுதி ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

டாக்கா,

வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்ற 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் நடந்து வந்தது. லீக் சுற்று முடிவில் வங்காளதேசம் (6 புள்ளி), ஆப்கானிஸ்தான் (4 புள்ளி) முதல் 2 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. ஜிம்பாப்வே (2 புள்ளி) ஒரு வெற்றியுடன் வெளியேறியது. இந்த நிலையில் வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் இடையிலான இறுதி ஆட்டம் டாக்காவில் நேற்றிரவு நடக்க இருந்தது. ‘டாஸ்’ போடுவதற்கு முன்பே மழை கொட்டித் தீர்ந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் இறுதி ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிக்கும் கோப்பை கூட்டாக வழங்கப்பட்டது.

Next Story