மெதுவாக பந்து வீச்சு: வெஸ்ட்இண்டீஸ் அணியினருக்கு அபராதம்


மெதுவாக பந்து வீச்சு: வெஸ்ட்இண்டீஸ் அணியினருக்கு அபராதம்
x
தினத்தந்தி 16 Dec 2019 11:10 PM GMT (Updated: 16 Dec 2019 11:10 PM GMT)

மெதுவாக பந்து வீசியதற்காக வெஸ்ட்இண்டீஸ் அணியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை,

சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி பந்து வீச வழக்கமான நேரத்தை விட கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. குறிப்பிட்ட கால அவகாசத்தை தாண்டி அந்த அணி 4 ஓவர்களை வீசியது. இது குறித்து நடுவர்கள் அளித்த புகாரை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் டேவிட் பூன் விசாரணை நடத்தி வெஸ்ட்இண்டீஸ் அணியினருக்கு போட்டி கட்டணத்தில் 80 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளார்.


Next Story