இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி நிதான ஆட்டம்


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி நிதான ஆட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2020 11:46 PM GMT (Updated: 18 Jan 2020 11:46 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தென்ஆப்பிரிக்க அணி நிதானமாக விளையாடி வருகிறது.

போர்ட் எலிசபெத்,

இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 499 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பென் ஸ்டோக்ஸ் 120 ரன்னும், ஆலிவர் போப் ஆட்டம் இழக்காமல் 135 ரன்னும் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி நிதானமாக ஆடினாலும் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 82 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. குயின்டான் டி காக் 63 ரன்னுடனும், பிலாண்டர் 27 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டாம் பெஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Next Story