நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா விலகல்


நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா விலகல்
x
தினத்தந்தி 2 Feb 2020 12:23 AM GMT (Updated: 2 Feb 2020 12:23 AM GMT)

நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து, இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா விலகினார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆபரேஷன் செய்து சிகிச்சை பெற்றார்.

கடந்த 6 மாதமாக எந்த போட்டியிலும் பங்கேற்காத ஹர்திக் பாண்ட்யா வருகிற 21-ந் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்பாக முழு உடல் தகுதியை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் இன்னும் முழுமையாக குணமடையாததால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விலகி உள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமி பிசியோதெரபிஸ்ட் ஆஷிஷ் கவுசிக்குடன் இணைந்து, அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஜேம்ஸ் அலிபோனை லண்டனுக்கு சென்று சந்தித்து ஆலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா முழு உடல் தகுதியை பெறுவதற்கான பயிற்சிகளை தேசிய கிரிக்கெட் அகாடமியில் மேற்கொள்வார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story