இலங்கை பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவருக்கு கொரோனா


இலங்கை பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 July 2021 3:07 AM GMT (Updated: 9 July 2021 3:07 AM GMT)

இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவருக்கு (ஜிம்பாப்வே) கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர் வருகிற 13-ந்ேததி கொழும்பில் தொடங்க உள்ள நிலையில் இலங்கை பயிற்சியாளர் கொரோனாவில் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story