பரோடா அணியில் இருந்து விலகி, ராஜஸ்தான் அணியில் இணைந்தார் தீபக் ஹூடா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்

பரோடா அணியில் இருந்து விலகிய தீபக் ஹூடா, ராஜஸ்தான் அணியில் விளையாட முடிவு செய்துள்ளார்.

புதுடெல்லி, 

சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை போட்டியில் பரோடா அணியின் கேப்டன் குருணல் பாண்டியாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தீபக் ஹூடா அணியில் இருந்தும், கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் வெளியேறினார். இதனால் அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். குருணால் பாண்டியா தன்னை அவமரியாதை செய்ததாக தீபக் ஹூடா குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் பரோடா அணியிலிருந்து தீபக் ஹூடா விலகியுள்ளார். ராஜஸ்தான் அணியில் அவர் விளையாடுவதற்கு பரோடா கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்துள்ளது. பரோடா அணிக்காக 46 முதல்தர ஆட்டங்களில் தீபக் ஹூடா விளையாடியுள்ளார். ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் இனிமேல் முதல் தர போட்டியில் ராஜஸ்தான் மாநில அணிக்காக விளையாட முடிவு செய்து இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ள தீபக் ஹூடா இந்த வருடப் போட்டியில் 8 ஆட்டங்களில் 1 அரை சதத்துடன் 116 ரன்கள் எடுத்துள்ளார். 

Next Story