ஒரு வீரராக கடைசி வரை பெங்களூரு அணிக்காக விளையாடுவேன் : விராட் கோலி
ஒரு வீரராராக கடைசி வரை பெங்களூரு அணிக்காக விளையாடுவேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார் .
சார்ஜா
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது.
139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 19.4ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐ.பி.எல். தொடரை விட்டு வெளியேறியது.
போட்டிக்கு பிறகு பெங்களூரு கேப்டனாக கடைசி போட்டியில் விளையாடியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு
விராட் கோலி அளித்த பேட்டியில் ;
என்னால் முடிந்த அளவு அணிக்காக செய்திருக்கிறேன். என்னை பொறுத்த
வரை விசுவாசம் முக்கியமானது.பெங்களூரு அணிக்காக 120 சதவீத உழைப்பை ஒவ்வொரு முறையும் வழங்கி இருக்கிறேன். அடுத்து ஒரு வீரராகவும் இதை நான் செய்வேன்.
பெங்களூர் அணியில் நான் ஒரு வீரராக கடைசி வரை விளையாடுவேன்.
இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story