கான்பூர் டெஸ்ட்: 4-ம் நாள் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 216 ரன்கள் முன்னிலை


கான்பூர் டெஸ்ட்: 4-ம் நாள் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 216 ரன்கள் முன்னிலை
x
தினத்தந்தி 28 Nov 2021 9:06 AM GMT (Updated: 28 Nov 2021 9:06 AM GMT)

4- நாள் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது.

கான்பூர், 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 345 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்தார். 

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து  அணி 296- ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  அடுத்து 49 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில்  ஒரு விக்கெட்டுக்கு 14 ரன்கள் எடுத்து மொத்தம் 63 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

4- ஆம் நாள் ஆட்டம் துவங்கியதில் இருந்தே இந்திய அணி தடுமாற்றம் கண்டது. புஜரா (22 ரன்கள்), கேப்டன் ரகானே (4 ரன்கள்), மயங்க் அகர்வால் (17 ரன்கள்)  ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். முதல் இன்னிங்சில் அரை சதம் அடித்த ஜடேஜா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 

ஸ்ரேயாஸ் அய்யர்- விருத்திமான் சகா கூட்டணி அணியை ஓரளவு சரிவில் இருந்து மீட்டது. பொறுப்புடன் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 65 ரன்கள் எடுத்த நிலையில் சவுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 4- நாள் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. விருத்திமான் சகா 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்திய அணி 2-ம் இன்னிங்ஸ்சில் 216 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Next Story