தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்: இந்திய ஏ அணி அபார பந்துவீச்சு


தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்: இந்திய ஏ அணி அபார பந்துவீச்சு
x
தினத்தந்தி 1 Dec 2021 7:46 AM GMT (Updated: 1 Dec 2021 7:46 AM GMT)

இந்திய ஏ அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க ஏ அணி 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.

ப்ளூம்போண்டைன் , 

குஜராத்தைச் சேர்ந்த பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்போண்டைனில் நடைபெறும் டெஸ்ட்  தொடரில் விளையாடி வருகிறது . மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 9 ஆம் தேதி முடிவடைகிறது.

இரு அணிகளும் மோதும் 2-வது  டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க ஏ அணி, முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. 

அந்த அணியில் அதிகபட்சமாக ஜார்ஜ் லிண்டே 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.இந்தியப் பந்துவீச்சாளர்களில் நவ்தீப் சைனி, இஷான் போரெல் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தமிழக வீரர் பாபா அபரஜித், 1 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இரண்டாவது நாள் ஆட்டம் இன்று பிற்பகலில் தொடங்குகிறது.

Next Story