முதலாவது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 408 ரன்கள் குவிப்பு...!


முதலாவது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 408 ரன்கள் குவிப்பு...!
x
தினத்தந்தி 28 Dec 2023 12:12 PM GMT (Updated: 28 Dec 2023 12:38 PM GMT)

டீன் எல்கர் 185 ரன்களுக்கு ஷர்த்துல் தாகூர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

செஞ்சூரியன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கியது.

நேற்று முன்தினம் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் இந்திய அணி 67.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 245 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ராகுல் 101 ரன்கள் எடுத்தார். இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. இதில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 66 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்து.

இந்த நிலையில் 3 நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் தொடர்ந்து ஆடிய டீன் எல்கர் 185 ரன்களுக்கு ஷர்த்துல் தாகூர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் சிறிது நேரம் தாக்கு பிடித்த ஜெரால்ட் கோட்ஸி 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் தென் ஆப்ரிக்கா அணி 408 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய மார்கோ ஜான்சன் 84 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரீத் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


Next Story