ஐ.பி.எல். 2024: புதிய ஜெர்சியை அறிமுகம் செய்தது பஞ்சாப் அணி


ஐ.பி.எல். 2024: புதிய ஜெர்சியை அறிமுகம் செய்தது பஞ்சாப் அணி
x

ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது

சென்னை,

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், 2024 ஐ.பி.எல். தொடருக்கான புதிய ஜெர்சியை பஞ்சாப் கிங்ஸ் அணி அறிமுகம் செய்துள்ளது . ஜெர்சியின் புகைப்படத்தை பஞ்சாப் அணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.


Next Story