ஐ.பி.எல்: ஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு


ஐ.பி.எல்: ஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 9 April 2024 1:38 PM GMT (Updated: 9 April 2024 3:30 PM GMT)

இன்று நடைபெறும் 23-வது ஐ.பி.எல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

முல்லாப்பூர்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் அதிரடியாக ஆடக்கூடிய கேப்டன் ஷிகர் தவான், பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன் இருந்தாலும் ஷிகர் தவான் தவிர மற்ற இரு வீரர்களும் தடுமாறுகிறார்கள். பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் ஷர்மா கைகொடுத்தால் பேட்டிங் மேலும் வலுப்பெறும்.

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி கணிக்க முடியாத ஒன்றாக விளங்குகிறது. மும்பைக்கு எதிராக 277 ரன்கள் குவித்து சாதனை படைத்ததுடன் 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 2 ஆட்டங்களிலும் அதிரடியாக 200 ரன்களுக்கு மேல் எளிதாக குவித்து மிரட்டிய ஐதராபாத் அணி மீண்டும் தனது அதிரடியை தொடருமா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story