ஐ.பி.எல்.: கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு


ஐ.பி.எல்.: கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு
x
தினத்தந்தி 3 May 2024 1:34 PM GMT (Updated: 3 May 2024 2:08 PM GMT)

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் மும்பை - கொல்கத்தா அணிகள் விளையாடுகின்றன.

மும்பை,

10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story