ராகுல் , ஹூடா அரைசதம்...ராஜஸ்தானுக்கு எதிராக லக்னோ அணி 196 ரன்கள் குவிப்பு


ராகுல் , ஹூடா அரைசதம்...ராஜஸ்தானுக்கு எதிராக  லக்னோ அணி 196 ரன்கள் குவிப்பு
x

அதிரடி காட்டிய கே.எல். ராகுல் 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

லக்னோ,

நடப்பு ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள 44வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதுகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, லக்னோ முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் , குயின்டன் டி காக் களமிறங்கினர்.தொடக்கத்தில் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டி காக் 8 ரன்களிலும் , பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து கே.எல். ராகுல் , தீபக் ஹூடா இருவரும் இணைந்து நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். பொறுப்புடன் ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அரைசதம் கடந்த பிறகு அதிரடி காட்டிய கே.எல். ராகுல் 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட் , போல்ட்,அவேஷ் கான் , அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 197 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடுகிறது.


Next Story