மும்பை அணிக்காக 200-வது போட்டியில் களமிறங்கிய ரோகித்... சச்சின் செய்த கவுரவம்


மும்பை அணிக்காக  200-வது போட்டியில் களமிறங்கிய ரோகித்... சச்சின் செய்த கவுரவம்
x

image courtesy: twitter/@mipaltan

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது 200-வது போட்டியில் ரோகித் சர்மா நேற்று களமிறங்கினார்.

மும்பை,

17-வது ஐ.பி.எல். தொடர் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது லீக் ஆட்டத்தில் நேற்று முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த போட்டி ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மாவின் 200-வது போட்டியாக அமைந்துள்ளது. இதனை சிறப்பிக்கும் விதமாக ரோகித் சர்மாவிற்கு மும்பை இந்தியன்ஸ் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதே போன்று சச்சின் டெண்டுல்கர், ரோகித் 200 என்று அச்சிடப்பட்ட சிறப்பு ஜெர்சியை பரிசாக அளித்து கவுரவித்துள்ளார்.


Next Story