டி.என்.பி.எல். கிரிக்கெட் நெல்லையில் நாளை தொடக்கம்


டி.என்.பி.எல். கிரிக்கெட் நெல்லையில் நாளை தொடக்கம்
x

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை தொடங்கும் நிலையில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

நெல்லை,

6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை (வியாழக்கிழமை) தொடங்கி ஜூலை 31-ந்தேதி வரை நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

நெல்லை சங்கர் நகரில் நாளை இரவு 7.15 மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நெல்லை ராயல் கிங்சை எதிர்கொள்கிறது. இதையொட்டி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் கேப்டன் கவுசிக் காந்தி தலைமையில் நேற்று தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியாளர் ஹேமங் பதானி வீரர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் ஜெகதீசன், அலெக்சாண்டர் ஆகியோர் கூறுகையில், 'நெல்லையில் முதல் ஆட்டத்தில் விளையாடுவது உற்சாகம் அளிக்கிறது. கொரோனாவால் கடந்த ஆண்டு ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெற்றது. இந்த ஆண்டு ரசிகர்கள் மத்தியில் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றனர்.


Next Story