உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி...விராட் கோலி பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி...!


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி...விராட் கோலி பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி...!
x

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

லண்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனை தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்தியா வெற்றிபெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 234 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வியை அடுத்து இந்திய முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆட்டக்காரருமான விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த ஸ்டோரியில் ,

அமைதி பெரும் பலத்தின் ஆதாரம் (silence is the source of great strength) என பதிவிட்டுள்ளார்.


Next Story