சூப்பர் கோப்பை கால்பந்து பெங்களூரு அணி சாம்பியன்


சூப்பர் கோப்பை கால்பந்து பெங்களூரு அணி சாம்பியன்
x
தினத்தந்தி 20 April 2018 10:15 PM GMT (Updated: 20 April 2018 9:45 PM GMT)

சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

புவனேஸ்வரம்,

முதலாவது ஹீரோ சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரத்தில் நேற்று நடந்தது. இதில் பெங்களூரு எப்.சி.-கிழக்கு பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி 4-1 என்ற கோல் கணக்கில் கிழக்கு பெங்காலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


கிழக்கு பெங்கால் அணியில் குரோமக் 28-வது நிமிடத்தில் கோல் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் ராகுல் பிகெ 39-வது நிமிடத்திலும், சுனில் சேத்ரி 68-வது மற்றும் 90-வது நிமிடத்திலும், நிகோலஸ் பெடோர் 71-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கிழக்கு பெங்கால் அணி வீரர் சமத் அலி மாலிக் 44-வது நிமிடத்தில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதால் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டியது ஆனது.

Next Story